×

கோளரங்கம் பற்றி கேள்வி கேட்க சொன்னால் கோளாறான கேள்விகளை கேட்குறீங்களே… சபாநாயகர் பேச்சால் சிரிப்பலை

கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் சின்னதுரை (கந்தர்வகோட்டை), ராஜன் செல்லப்பா (திருப்பரங்குன்றம்) ஆகியோர் தங்களுடைய தொகுதிகளில் கோளரங்கம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.  அப்போது அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி, தனது தொகுதியில் கல்லூரிக்கு கூடுதல் கட்டிடம் வேண்டும் என்றார். இதற்கு சபாநாயகர் அப்பாவு, ‘ஏங்க கேள்வி கோளரங்கம், அதுபற்றிய கேள்வி கேட்க வேண்டும். துணை கேள்வி கேட்டால் விவரமா, கேட்க வேண்டாமா? இதனால் உறுப்பினர் கோவிந்தராஜ் சிரித்துக்கொண்டே இருக்கையில் அமர்ந்தார். தொடர்ந்து அதிமுக எம்எல்ஏ சு.ரவியும் (அரக்கோணம்) வகுப்பறை கட்டிடம் தொடர்பான கேள்வியை எழுப்பினார். அப்போது சபாநாயகர் சு.ரவியை திரும்பி பார்த்தார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது. கோளரங்கம் பற்றி கேட்க சொன்னா கோளாறான கேள்விகள் எல்லாம் கேட்கிறீங்க, உட்காருங்க என சபாநாயகர் தெரிவித்தார். இதனால் அவையில் மீண்டும் சிரிப்பலை எழுந்தது….

The post கோளரங்கம் பற்றி கேள்வி கேட்க சொன்னால் கோளாறான கேள்விகளை கேட்குறீங்களே… சபாநாயகர் பேச்சால் சிரிப்பலை appeared first on Dinakaran.

Tags : Chinnadurai ,Gandharvakottai ,Rajan Chellappa ,Thiruparangunram ,
× RELATED +2 தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி...