×

காஷ்மீரில் லஷ்கர் -இ- தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக் கொலை.. துப்பாக்கிச் சூட்டில் 3 வீரர்கள் காயம்!!

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் லஷ்கர் -இ- தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி யூசுப் கான்ட்ரூ சுட்டுக் கொல்லப்பட்டார். வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவில் உள்ள மால்வா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது..தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அங்கு தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது  தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் 3 வீரர்கள் மற்றும் பொது மக்கள் ஒருவர் காயமடைந்துள்ளதாக காஷ்மீர் மண்டல காவல்துறை ஐஜி விஜய் குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் ‘பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இவன் லஷ்கர் -இ- தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி யூசுப் கான்ட்ரூ என்று கண்டறியப்பட்டுள்ளது. பட்காம் மாவட்டத்தில் எஸ்பிஓ மற்றும் அவரது சகோதரர், ஒரு சிப்பாய் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டது உட்பட பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் கொலை சம்பவங்களில் யூசப்புக்கு தொடர்புள்ளது. கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன,’என்று விஜய் குமார் குறிப்பிட்டுள்ளார். …

The post காஷ்மீரில் லஷ்கர் -இ- தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக் கொலை.. துப்பாக்கிச் சூட்டில் 3 வீரர்கள் காயம்!! appeared first on Dinakaran.

Tags : Lashkar-e-Tooiba ,Kashmir ,Srinagar ,Bharamulla district ,Jammu and Kashmir ,Lashkar-e-Toiba ,Lashkar-e- Tooiba ,Dinakaran ,
× RELATED மோசமான வானிலை : அனந்தநாக் – ரஜோரி தேர்தல் தேதி மாற்றம்