×

போக்குவரத்து போலீசார் நூதன நடவடிக்கை; நெல்லையில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு பரிசு: அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம்

நெல்லை: நெல்லை மாநகர பகுதியில் விபத்து மற்றும் உயிரிழப்பு தடுக்கவும், போக்கு விதிமுறைகளை கடைபிடிக்கவும்  மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் உத்தரவின்பேரில் போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போக்குவரத்து போலீசார் நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகில் இன்று (ஏப்.20) போக்குவரத்து  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணிந்தும், அணியாமலும் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஹெல்மெட் அணிந்திருந்த வாகன ஓட்டிகளுக்கு பேனா, பென்சில் உள்ளிட்ட பரிசுகளுடன் வெயிலை சமாளிக்கும் வகையில் குளிர்பானம் வழங்கி வாகன ஓட்டிகளை மனம் குளிர வைத்தனர். இதுபோல் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஊடகம், பத்திரிகை துறை என வாசகம் எழுதிய வாகனங்களில் வந்தவர்களும் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் பத்திரிகை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நபர், வாகனத்தில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நபருக்கும் போலீசார் அபராதம் விதித்ததுடன் பிரஸ் ஸ்டிக்கரை அகற்றுமாறு அறிவுறுத்தினர்….

The post போக்குவரத்து போலீசார் நூதன நடவடிக்கை; நெல்லையில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு பரிசு: அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Santhoshkumar ,Minister of ,
× RELATED ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கி...