×

கொரோனா மீண்டும் ஏறுமுகம்: நெல்லையில் `முக கவசத்துக்கு’ மாறிய பொதுமக்கள்

நெல்லை: இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் ஏறுமுகமாக உள்ளது. குறிப்பாக டெல்லி, மராட்டியம் உபி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தொற்று பரவல் ஏறுமுகமாக உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் தொற்று பரவாமல் தடுக்க உரிய விதிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதாரத்துறை  அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அறிவுறுத்தி  உள்ளனர். மேலும் கொரோனா தொற்று  அதிகரிக்காமல்  கட்டுப்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர்  அறிவுறுத்தி உள்ளார். இந்நிலையில் நெல்லையில் இன்று பொது இடங்களில் முககவசம் அணிந்து செல்வோர் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இருசக்கர வாகனங்கள் மற்றும் பஸ்களில் செல்லும் பலர் தாங்களாவே முன்வந்து முககவசம் அணிந்து செல்வதை காணமுடிந்தது. பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் செல்லும்போது முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு சுகாதாரத்துறையினர் மற்றும் டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்….

The post கொரோனா மீண்டும் ஏறுமுகம்: நெல்லையில் `முக கவசத்துக்கு’ மாறிய பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Corona resurgence ,Nellai ,Nellie ,India ,Delhi ,Maharashtra ,Corona resurgence: Public ,
× RELATED சொந்த ஊரில் உடல் அடக்கம்; நெல்லை காங்....