×

விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் தீவிரம்

திருவில்லிபுத்தூர்: விருதுநகரில் 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜுனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேர் மற்றும் 4 சிறார்கள் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், ஹரிகரன் உட்பட 4 பேரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்தும் விசாரித்தனர். இந்நிலையில் நேற்று 4 பேரும் திருவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து நீதிபதி கோபிநாத், 4 பேரையும் வரும் 2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண் மற்றும் அவரது தாய், அண்ணன், அக்கா ஆகியோரிடம் விசாரணை முடிவடைந்தது. கைதான ஹரிஹரன், மாடசாமி, ஜூனத் அகமது, பிரவீன் ஆகிய 4 பேரை சிபிசிஐடி போலீசார் கடந்த மாதம் 7 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்தும், கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருந்த 4 சிறார்களிடமும் விசாரணை நடத்தினர். பாலியல் வழக்கை 60 நாட்களில் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முதல்வர் உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குற்றவாளிகளிடம் விசாரணை முடிந்து, மருத்துவ சோதனை அறிக்கை பெறப்பட்ட நிலையில், சிபிசிஐடி 10 நாட்களில் தாக்கல் செய்ய ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தயாராகி வருகிறது. …

The post விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Vrutunagar ,Thiruvilliputtur ,Hariharan ,Junath Ahmed ,Madasamy ,Praveen ,Vrududunagar ,Vrudunagar ,
× RELATED தஞ்சாவூர் அருகே பயங்கரம்: பழ வியாபாரி வெட்டி படுகொலை: 5 பேரிடம் விசாரணை