×

ஏட்டு வீட்டில் பைக் திருட்டு

அம்பத்தூர்: அம்பத்தூர் கள்ளிகுப்பத்தை சேர்ந்தவர் ஜெகதம்மாள், அம்பத்தூர் காவல் நிலைய தலைமை காவலர். இவரது கணவர் மணிகண்டன் (43), நேற்று முன்தினம் தனது பைக்கை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். நேற்று காலை பார்த்தபோது, பைக் திருடு போனது தெரிந்தது. அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, வாலிபர் ஒருவர் பைக்கை திருடி செல்வது தெரிந்தது. போலீசார் வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர். …

The post ஏட்டு வீட்டில் பைக் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Ettu house ,Ampathur ,Jagathammal ,Ampathur Kallikuppam ,Ampathur police station ,Manikandan ,
× RELATED அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மாநகர...