×

காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதால் நடிகர் பிரபாசுக்கு அபராதம்

திருமலை: ஐதராபாத்தில் காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததால், நடிகர் பிரபாசுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக கார் கண்ணாடிகளில் ஒட்டியுள்ள கருப்பு ஸ்டிக்கர்களை போக்குவரத்து போலீசார் சோதனை செய்து அகற்றி வருகின்றனர். பொதுவாக சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் தங்கள் காரில் கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு செல்கின்றனர். இதனால், ஐதராபாத்தில் போக்குவரத்து போலீசார் நடத்தும் சோதனையில் பல பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்கள் சிக்குகின்றனர். இதையடுத்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.ஏற்கனவே நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜூன், கல்யாண் ராம், மனோஜ் மன்சு, நாகசைதன்யா, இயக்குனர் திரிவிக்ரம் ஆகியோரின் கார்களை தடுத்து நிறுத்தி, அவர்களின் கார்களில் இருந்த கருப்பு ஸ்டிக்கர்களை அகற்றி அபராதம் விதித்துள்ளனர். இந்நிலையில், நேற்று ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் போக்குவரத்து போலீசார் நடத்திய சோதனையில், பான் இந்தியா பட நடிகர் பிரபாஸ் காருக்கு அபராதம் விதித்தனர். பிரபாஸ் காரில் எம்பி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட நம்பர் பிளேட் மற்றும் கார் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் இருந்ததால், பிரபாஸ் காருக்கு ₹1,450 அபராதம் விதித்தனர். சோதனையின்போது காரில் பிரபாஸ் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்….

The post காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதால் நடிகர் பிரபாசுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Prabas ,Thirumalai ,Hyderabad ,Telangana ,
× RELATED கல்கி 2898 ஏடி ஜூன் 27ல் ரிலீஸ்