×

நீடாமங்கலம் அருகே அதிமுக ஆட்சியில் துவக்கம் பாதியில் நிறுத்தப்பட்ட பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகில் கோரையாற்றில் அதிமுக ஆட்சியில் கட்டி நிறுத்தப்பட்டுள்ள பாலம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் அடிக்கடி போடப்படும் ரயில்வே கேட்டால் அதிக போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வெளி மாநிலம், மாவட்டம் மற்றும் அருகில் உள்ளவர்கள் நவகிரக கோயில்கள், சுற்றுலா தலங்களுக்கு நீடாமங்கலம் வழியாக செல்லும் போது நெரிசலில் மாட்டி செல்லும் இடங்களுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனையறிந்த கடந்த அதிமுக ஆட்சி நடந்த போது போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடி செல்லும் சாலை தட்டித்தெருவிலிருந்து நீடாமங்கலத்திலிருந்து ரிஷியூர் செல்லும் சாலை கொத்தமங்கலத்தை இணைத்து கோரையாற்றில் இணைப்பு பாலம் கட்டும்பணி தொடங்கப்பட்டது.இந்த பாலம் கட்டும் பணி நிறைவடைந்தால் நீடாமங்கலத்தில் ஓரளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. ஏனென்றால் மன்னார்குடி பகுதியிலிருந்து வரும் பள்ளி வாகனங்கள், ஆட்டோ, கார், வேன் மற்றும் இரு சக்கர வாகணங்கள் கடைவீதி செல்லாமல் இந்த பாலம் வழியக செல்லும் என்ற நோக்கில் இந்த பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்கி நடந்து நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் நிறுந்தப்பட்டுள்ள பாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post நீடாமங்கலம் அருகே அதிமுக ஆட்சியில் துவக்கம் பாதியில் நிறுத்தப்பட்ட பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Needamangalam ,AIADMK ,ADMK ,Korai ,Dinakaran ,
× RELATED திருவாரூர் விதை பரிசோதனை நிலையத்தில் வேளாண். கல்லூரி மாணவர்கள் பயிற்சி