×

ஓடும் ரயிலில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 4 பேரிடம் விசாரணை

பொன்னேரி: மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அத்திப்பட்டு ரயில்  நிலையத்தில் நேற்று மாலை 4 மணியளவில் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி மின்சார ரயில் வந்தது. அதில், பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் பயணித்தனர். அப்போது, அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் கத்தி மற்றும் கற்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். இதைக்கண்டு சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இதுதொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான மீஞ்சூர் அடுத்த இலவம்பேடு பகுதியை சேர்ந்த திலீப்(20), கும்மிடிப்பூண்டி பூபாலன் நகரை சேர்ந்த விக்னேஷ்(19), ராமபுரம் தடாவை சேர்ந்த ராஜிவ்(19) மற்றும் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த அஜித்(21) ஆகியோரை பிடித்தனர். பின்னர் அவர்களை மீஞ்சூர் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து  விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் 2 மாணவர்களுக்கு கத்தியால் வெட்டு விழுந்ததில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அத்திப்பட்டு –  மீஞ்சூர் ரயில் நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

The post ஓடும் ரயிலில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 4 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Athipattu railway station ,Meenjoor ,Chennai ,
× RELATED போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூரில் கஞ்சா...