×

போலீஸ் நிலையத்தில் தீக்குளித்த வாலிபர்

பொன்னை: வேலூர் மாவட்டம் வள்ளிமலை அடுத்த குகையநெல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத் (25), நெல் அறுவடை இயந்திர உரிமையாளர். இவரது தம்பி சஞ்சய் (21). இவர் கடந்த 2019ல் அதே பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணை கடத்திச் சென்றதாக மேல்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு சஞ்சய் அண்ணன் சரத் உடந்தையாக இருந்ததாக கூறி இவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கு கோர்ட் அனுப்பிய சம்மனுக்கு சரத் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக மேல்பாடி சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரத்தை சந்தித்து உடனடியாக கோர்ட்டில் ஆஜராகும்படி கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை சரத் மேல்பாடி போலீஸ் ஸ்டேஷன் முன்பு வந்து எஸ்ஐ கார்த்திக்கை கண்டித்து திடீரென தீக்குளித்தார். இதில் தீ உடல் முழுவதும் பற்றி எரிந்தது. வலியால் அலறி துடித்தார். உடனே அங்கிருந்த போலீசார் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். தீக்காயத்துடன் இருந்தபடி சரத் பேசிய வீடியோவில், ‘மேல்பாடி போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் கார்த்திக் என்னை அடிக்கடி சந்தித்து பணம் கேட்டார். அது மட்டும் இல்லாமல் என்னை பார்க்கும் போதெல்லாம் தகாத வார்த்தையால் திட்டுவார். சில நாட்களுக்கு முன்பு என்னை செருப்பால் அடித்து அசிங்கப்படுத்தினார்’ என கூறியதாக தெரிகிறது. …

The post போலீஸ் நிலையத்தில் தீக்குளித்த வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Ponna ,Sarath ,Kagayanellur ,Vallimalore district ,Valier ,Dinakaran ,
× RELATED ரெண்டு பேருக்கும் கொம்பு ஊதும்...