- தெற்கு
- வட உள் தமிழ்நாடு
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- தென்கிழக்கு
- சென்னை வானிலை மையம்
- தின மலர்
சென்னை: தென்தமிழகம் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. தென் தமிழக கடலோர பகுதிகளில் மேல்நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக 2 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தென்தமிழக மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்தது. அதேபோன்று நாளை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் மற்றும் தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்தது. அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்ஸியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்தது. கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையின் அளவு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பூரில் 9 செ.மீ. மழையும், கயத்தாறில் 8 செ.மீ. மழையும், ராமநாதபுரம் மாவட்டம் முகுளத்தூர் பகுதியில் 7 செ.மீ. மழையும், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தலா 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. …
The post தென் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.