×

பாகனை அடித்து கொன்ற மதம் பிடித்த யானை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் புத்தன்குளம் பகுதியை சேர்ந்தவர் சஜி. உண்ணிகிருஷ்ணன் என்ற பெயரில் 35 வயதான ஒரு ஆண் யானையை வளர்த்து வருகிறார். இந்த யானையை கோயில் விழாக்களுக்கும், தடி பிடிக்கவும் (வெட்டப்பட்ட மரங்களை எடுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றுதல்) வாடகைக்கு விட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று யானையை பாகன் உண்ணி (54) திருவனந்தபுரம் அருகே கல்லம்பலம் என்ற இடத்தில் உள்ள ரப்பர் தோட்டத்தில் தடி பிடிப்பதற்காக கொண்டு சென்றிருந்தார். தடியை எடுத்துக்கொண்டு சிறிது தொலைவில் ரோட்டில் நிறுத்தி வைத்திருந்த லாரிக்கு கொண்டு சென்றபோது திடீரென யானைக்கு மதம் பிடித்தது. அதைத் தொடர்ந்து பயங்கரமாக பிளிறியபடியே மேலே அமர்ந்திருந்த பாகன் உண்ணியை யானை கீழே தூக்கி வீசியது. பின்னர் தும்பிக்கையால் பாகனை பிடித்து தரையில் பல முறை பலமாக அடித்தது. அதன் பிறகும் கோபம் தீராமல் காலால் பலமுறை மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே பாகன் உண்ணி பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்தவர்கள் கூக்குரலிட்டனர். இருப்பினும் யானை பாகனின் உடல் இருந்த இடத்தை விட்டு நகர மறுத்தது. இதனால் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு வழியாக சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு யானை அந்த இடத்தை விட்டு சிறிது நகர்ந்தது. இதன் பிறகு பாகனின் உடல் கொல்லம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையே மதம் பிடித்த யானை ரப்பர் தோட்டத்தில் அங்கும் இங்குமாக ஓடியது. இது குறித்து போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறை டாக்டர்கள் விரைந்து வந்து மயக்க ஊசி செலுத்தி யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்….

The post பாகனை அடித்து கொன்ற மதம் பிடித்த யானை appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Puthankulam ,Kollam, Kerala ,Nikrishnan ,Pagan ,
× RELATED பெண்ணின் பலாத்கார வீடியோவை...