- டாக்டர்
- எம்.ஜி.ஆர்
- மருத்துவ பல்கலைக்கழகம்
- துணை
- வேந்தர்
- சுதா சீஷயான்
- கவர்னர்
- ரவி
- சென்னை
- சென்னை கின்டி
- மருத்துவ
- பல்கலைக்கழக
- ஆளுநர் ஆர். என்
- தின மலர்
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷையனின் பதவிக்காலத்தை வரும் டிசம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். புதிய தேர்வுக் குழுவை அடுத்த ஓரிரு மாதங்களில் அமைக்கும் படியும் தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார். டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழகத்தின் 10-வது துணைவேந்தராக 2018-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி பொறுப்பேற்ற சுதா சேஷையனின்பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி உடன் நிறைவடைந்தது. இதையடுத்து, புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழுவை அரசு அமைத்தது. துணைவேந்தர் பதவிக்கு மொத்தம் 37 பேர் விண்ணப்பித்து, நேர்காணல் முடிந்த நிலையில் மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயண பாபு, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்திமலர் மற்றும் மூத்த மருத்துவர் ரேவதி ஆகிய 3 பேரை தேர்வு செய்து, ஆளுநரின் முடிவுக்காக தேர்வுக்குழு அனுப்பியது. ஆனால் சுதா சேஷையனின் பதவிக்காலத்தை டிசம்பர் வரை நீட்டித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். …
The post டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷையனின் பதவிக்காலம் வரும் டிசம்பர் வரை நீடிப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு appeared first on Dinakaran.