×

மனைவியை பலாத்காரம் செய்ய முயற்சி; உலக்கையால் அடித்து தம்பி கொலை: அண்ணனுக்கு வலை

அரியலூர்: அரியலூர் அருகே உள்ள பூண்டியை சேர்ந்த கந்தசாமி மகன் முருகானந்தம்(38). திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரதி அழகி(32). இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை, ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளனர். முருகானந்தம் தம்பி ரமேஷ்(32), கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அண்ணன், தம்பி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் ரமேஷ், தனது அண்ணி ரதி அழகியிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் சத்தம் போட்டு கொண்டே வீட்டை விட்டு ரதி அழகி வெளியே ஓடி வந்து விட்டார். நேற்று இரவு வீட்டுக்கு வந்தபோது ரமேசுக்கு தகவல் தெரியவந்தது. இதனால்  2 பேருக்கும் தகராறு முற்றியது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் கீழே விழுந்த ரமேஷை அருகில் கிடந்த உலக்கையால் அண்ணன் முருகானந்தம் தாக்கினார். இதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே ரமேஷ் பலியானார். இந்த தகவல் அறிந்ததும் கீழப்பழூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து தலைமறைவான முருகானந்தத்தை தேடி வருகின்றனர்….

The post மனைவியை பலாத்காரம் செய்ய முயற்சி; உலக்கையால் அடித்து தம்பி கொலை: அண்ணனுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Muruganandam ,Kandasamy ,Bundi ,Trichy ,Samayapuram ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...