×

காந்தாரா 2 ஆக்‌ஷன் காட்சிகளுக்காக ரிஷப் ஷெட்டி விசேஷ பயிற்சி

பெங்களூரு: கன்னட இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ள ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய படம், ‘காந்தாரா’. இது கன்னடம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. ரூ.16 கோடி செலவில் தயாரான இப்படம், ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்தது. இதையடுத்து ‘காந்தாரா’ படத்தின் 2ம் பாகம் உருவாகும் என்று படக்குழு அறிவித்தது. இதை ரிஷப் ஷெட்டியும் உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில், ‘காந்தாரா 2’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முழுமையாக நிறைவுபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை விட பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தில், பேமிலி ெசன்டிமெண்ட் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் நடிப்பதற்காக ரிஷப் ஷெட்டி விசேஷ பயிற்சி பெற்று வருகிறார். அதன்படி அவர் சிறப்பு தற்காப்பு கலைகளை கற்று வருகிறார் என படக்குழு தெரிவித்துள்ளது.

The post காந்தாரா 2 ஆக்‌ஷன் காட்சிகளுக்காக ரிஷப் ஷெட்டி விசேஷ பயிற்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rishabh Shetty ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED படம் பார்க்க பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன்: ரிஷப் ஷெட்டி உருக்கம்