×

கேத்தரின் நீர்வீழ்ச்சியில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோத்தகிரி : கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.இந்த நீர்வீழ்ச்சிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நீர்வீழ்ச்சியின் காட்சி முனையை மட்டுமே பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சில சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று கடந்து தனியார் தேயிலை தோட்டம் வழியாக நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்கின்றனர். அங்கு அவர்கள் மது அருந்தியும் பாட்டில்கள் உடைத்தும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post கேத்தரின் நீர்வீழ்ச்சியில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Catherine Falls ,Kothagiri ,Kunjapan Panchayat ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்