×

செல்போன் பறித்த வாலிபருக்கு தர்மஅடி கொடுத்த மாணவிகள்

பெரம்பூர்: சாலையில் நடந்து சென்றபோது செல்போன் பறித்துக்கொண்டு தப்ப முயன்ற வாலிபரை, கல்லூரி மாணவிகள் மடக்கி பிடித்து தர்மர் அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரவள்ளூர், ஜிகேஎம் காலனி, 18வது தெருவை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் தனது தோழியுடன் பெரம்பூர் லோகோ ஸ்கீம் 2வது தெரு வழியாக நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, 2 வாலிபர்கள் அவ்வழியே பைக்கில் வந்தனர். அவர்களில் ஒருவர் மட்டும் பைக்கில் இருந்து இறங்கி வந்து, மாணவி கையில் வைத்திருந்த விலை மதிப்புள்ள செல்போனை திடீரென பறித்துக் கொண்டு தயாராக இருந்த பைக்கில் ஏறி தப்ப முயன்றார். சுதாரித்துக்கொண்ட மாணவிகள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து, கீழே தள்ளி, அருகில் கிடந்த கட்டையால் தர்ம அடி கொடுத்தனர். மற்றொருவர் பைக்கில் தப்பிவிட்டார். சத்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர், அந்த வாலிபரை பிடித்து வைத்து, இதுபற்றி பெரவள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசாரிடம், அந்த வாலிபரை ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (25) என்பதும், பைக்கில் தப்பிச் சென்றது அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் சூர்யா (எ) உதய சூர்யா (25) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, உதய சூர்யாவையும் கைது  செய்த போலீசார், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து  சிறையில் அடைத்தனர்.  …

The post செல்போன் பறித்த வாலிபருக்கு தர்மஅடி கொடுத்த மாணவிகள் appeared first on Dinakaran.

Tags : Perampur ,Darmar ,
× RELATED சென்னையில் நான்காவது சம்பவம்;...