×

ராயக்கோட்டையில் தக்காளி விலை உயர்வு

ராயக்கோட்டை : ராயக்கோட்டை பகுதியில், விவசாயிகள் தக்காளியை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். கடந்தாண்டு கொரோனா பரவலின் போது, தக்காளி கிலோ ₹200 வரை விற்றதால், அதிகளவில் தக்காளி பயிாிடப்பட்டது. இந்நிலையில் அதிக மழைப்பொழிவால், தக்காளி நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. வரத்து அதிகாிப்பாலும், மற்ற மாவட்டங்களிலும் தக்காளி விளைச்சல் அதிகாித்ததாலும், தக்காளி விலை குறைந்தது. கடந்த ஒரு மாதமாக 25 கிலோ கொண்ட ஒரு கிரேடு தக்காளி ₹50க்கும் குறைவாகவே விற்றது. இதனால், கவலையடைந்த விவசாயிகள், தக்காளி தோட்டங்களுக்கு தண்ணீர் கட்டாமலும், தக்காளியை பறிக்காமலும், தோட்டத்தை பராமாிக்காமலும் விட்டனர். அதனால், தக்காளி வரத்து வெகுவாக குறைந்தது. தற்போது விலை உயர்ந்து, நேற்று 25 கிலோ கொண்ட கிரேடு ₹350க்கு விற்றது. இதனால், மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், தோட்டங்களை பராமரிப்பு செய்து தண்ணீர் கட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்….

The post ராயக்கோட்டையில் தக்காளி விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Raikotte ,Rayakkotta ,Rayakotte ,Dinakaran ,
× RELATED ராயக்கோட்டையில் தக்காளி நாற்று உற்பத்தி மும்முரம்: பண்ணையாளர்கள் ஆர்வம்