×

ஆந்திர பேருந்தில் கஞ்சா கடத்தல்: வாலிபர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆரம்பாக்கம் சோதனை சாவடியில் இன்ஸ்பெக்டர்  அய்யனாரப்பன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆந்திர மாநில பதிவு கொண்ட அரசு பேருந்தை போலீசார் மடக்கினர். சோதனையில் 8 கிலோ கஞ்சா இருந்தது. இதுதொடர்பாக மதுரை மாவட்டத்தை சேர்ந்த வினோத்குமார்(36) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர், ஒரிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கிக்கொண்டு சென்னை வழியாக மதுரை மாவட்டத்திற்கு கொண்டு சென்றது தெரியவந்தது….

The post ஆந்திர பேருந்தில் கஞ்சா கடத்தல்: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : AP ,Waliber ,Sub-Inspector ,Raj ,Ayyanarappan ,Inspector ,Kummhipundi ,
× RELATED ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உரிய...