×

மாங்காட்டில் கோஷ்டி மோதல் இருவருக்கு குண்டாஸ்

குன்றத்தூர்: கோஷ்டி மோதலில் ஈடுபட்டவர்கள்  குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். மாங்காடு அடுத்த பெரிய கொளுத்துவான்சேரி பகுதியை சேர்ந்தவர் குரு (எ) குருமூர்த்தி (42), இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வீரா என்ற இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் மாங்காடில் இரு தரப்பிலிருந்தும் மாறி, மாறி வெட்டிக் கொண்டனர். இதில் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குருமூர்த்தி (42) மற்றும் பரத்ராஜ்(எ)சீனு(23) ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்ட்டார். அதன்படி மாங்காடு போலீசார் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நேற்று கைது செய்தனர்….

The post மாங்காட்டில் கோஷ்டி மோதல் இருவருக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Mangat ,Kunradthur ,Mangatu ,Koluthuvansery ,Guntas ,Dinakaran ,
× RELATED குன்றத்தூர் முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை: திரளான பெண்கள் வழிபாடு