×

திருப்பூர் அருகே மின்கம்பி உரசியதால் தீப்பிடித்த லாரி: 200-க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகள் எரிந்து முற்றிலும் சேதம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மின்கம்பி உரசியதால் வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து முழுமையாக எரிந்து சேதமடைந்தது. தாராபுரம் அருகே உள்ள குளத்துப்பாளையம் பேரூராட்சி பகுதியில் உள்ள வயல்களில் சம்பா அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இங்கிருந்து வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஓன்று பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது டி.காளிபாளையம் பகுதி அருகே அங்கிருந்த மின்சார வயரில் வைக்கோல் கட்டுகள் உரசியதால் தீப்பற்றியது. மளமளவென தீப்பிடித்து வைக்கோல் கட்டுகள் ஏரிந்ததை பார்த்த ஓட்டுநர், வாகனத்தில் இருந்து குதித்து உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ பகுதிக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் ரூ.80 மதிப்பிலான 200-க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகளும், வாகனமும் முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த சம்பவம் குறித்து தாராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.           …

The post திருப்பூர் அருகே மின்கம்பி உரசியதால் தீப்பிடித்த லாரி: 200-க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகள் எரிந்து முற்றிலும் சேதம் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tarapuram ,Dinakaran ,
× RELATED துலுக்கவலசு பகுதியில் சரக்கு வாகனம் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!