×

தலைமை ஹாஜி அறிவிப்பு இன்று முதல் ரம்ஜான் நோன்பு தொடக்கம்

சென்னை: இன்று முதல் ரம்ஜான் நோன்பு தொடங்குவதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்கள் ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் நோன்பிருப்பது வழக்கம். ஷவ்வால் மாதம் 29ம் நாளில் வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜான் நோன்பு தொடங்கப்படும். அவ்வாறு பிறை தென்படாத சூழலில் மறுநாள் முதல் நோன்பை தொடங்குவார்கள்.இந்நிலையில், நேற்று ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை தென்பட்டது. இதையடுத்து இன்று முதல் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் கூறியதாவது: ரம்ஜான் நோன்பு என்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று. தமிழகத்தில் சென்னையில் நேற்று பிறை தென்பட்டுள்ளது. எனவே இன்று முதல் நோன்பு தொடங்கும். அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் என்ற சிறப்பு தொழுகை நடைபெறும். ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து 5 வேளை தொழுகை செய்வார்கள். மாலையில் நோன்பு திறக்கப்படும். அதற்காக அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நோன்பு 27ம் நாளை லைலத்துல்கத்ரு இரவாகவும், 30ம் நாள் முடிவில் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுகிறார்கள். சென்னையில் நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஷஹர் என்ற உணவு இலவசமாக வழங்க 60க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….

The post தலைமை ஹாஜி அறிவிப்பு இன்று முதல் ரம்ஜான் நோன்பு தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Haji ,Ramadan ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,Ramzan ,Muslims ,Chief Haji ,
× RELATED சென்னை சாம்பியன் வென்றது மாநில அளவிலான குத்துச்சண்டை