×

தலைமை காவலரை தாக்கிய ரவுடி கைது

பெரம்பூர்: கீழ்ப்பாக்கம் டிபி சத்திரம் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் சண்முகம். இவர் திருவிக நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இரு தினங்களுக்கு முன் இரவு உதவி ஆய்வாளர் சேகருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எஸ்.ஆர்.பி.காலனி பகுதியில் சென்றபோது குடிபோதையில் வந்த வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதனால் உதவி ஆய்வாளர் சேகர் மற்றும் ஓட்டுநர் சண்முகம் ஆகியோர் அவர்களை கலைந்து போகும்படி கூறினர். அப்போது திருவிக நகர் கோபாலபுரம் பகுதியை சேர்ந்த ரவுடி ஜெயசூர்யா, தலைமை காவலர் சண்முகத்தின் சட்டையை பிடித்து அடித்து அவரை தள்ளி விட்டு தப்பிச்சென்றார். இதில் தலைமை காவலர் சண்முகத்திற்கு இடது கை, இடது கால் அகிய இடத்தில் காயம் ஏற்பட்டது. இது சம்பந்தமாக ஓட்டுநர் சண்முகம் திருவிக நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி ஜெயசூர்யாவை கைது செய்தனர்….

The post தலைமை காவலரை தாக்கிய ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Perampur ,Obey ,DB ,Guard Residence Shanmukam ,Dirivika Nagar ,Dinakaran ,
× RELATED சென்னை தண்டையார்பேட்டையில் சரித்திர...