×

சுங்கச்சாவடி ஊழியரை சரமாரியாக தாக்கிய பெண்: வைரலாகும் வீடியோ

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில், ஊழியரை பெண் சரமாரியாக தாக்கினார். இந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.செங்கல்பட்டு அருகே பரனூர் உள்பட 24 சுங்கச்சாவடிகளுக்கு நேற்று கட்டணம் உயர்த்தப்பட்டது.  இந்தவேளையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், செங்கல்பட்டு  பரனூர் சுங்கச்சாவடிக்கு ஒரு கார் வந்தது. அதில் வந்த ஒரு பெண், பாஸ்டேக் மூலம் பணம் செலுத்த முயன்றார். அப்போது, அதில் பணம் குறைவாக இருந்தது. இதனால் அங்கிருந்த ஊழியர், ₹110 கட்டணம் செலுத்திவிட்டு, செல்லும்படி கூறினார்.இதனால், ஆத்திரமடைந்த பெண், அவருடன் வந்த ஆண், சுங்கச்சாவடி ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அந்த ஊழியரை சரமாரியாக தாக்கி, சுங்கச்சாவடி அறையின் கண்ணாடியை அடித்து உடைத்தனர். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.புகாரின்படி செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடியோ காட்சியில் பதிவான பெண், அவருடன் வந்த ஆணை தேடி வருகின்றனர். தற்போது அந்த வீடியோ வாட்ஸ் அப், பேஸ்புக் உள்பட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், செங்கல்பட்டை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், இதே சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில்,  தற்போது பெண், ஊழியரை  தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  …

The post சுங்கச்சாவடி ஊழியரை சரமாரியாக தாக்கிய பெண்: வைரலாகும் வீடியோ appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Paranur ,booth ,Sengalpattu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் அஞ்சல்துறை...