×

போலீசாரை தாக்கிய வழக்கில் சென்னை வாலிபர் உள்பட 5 பேர் கைது

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் காவல் நிலைய போலீசார் 2 பேர், கடந்த 21ம் தேதி மதுராந்தகம் அடுத்த பூதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த டாஸ்மாக் கடை ஒன்றை சிலர் உடைக்க முயற்சி செய்வதை கண்டு, அவர்களை பிடிக்க முயன்றனர். உடனே மர்மநபர்கள், போலீசார் 2 பேரையும் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். புகாரின்படி மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை போலீசார், மதுராந்தகம் – திருக்கழுக்குன்றம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மறித்து விசாரித்தபோது, அதில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று தீவிரமாக விசாரித்தனர். அதில், சென்னை வேளச்சேரி பிங்கு (எ) விக்னேஷ் (28), வந்தவாசி வெங்கடேசன் (30), அஹமது சுலைமான் (30), கிளாம்பாக்கம் மணிவண்ணன் (28), ஓட்டேரி நவீன் (28) ஆகியோர் என தெரிந்தது. மேலும் விசாரணையில், போலீசாரை தாக்கிவிட்டு தப்பியவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், 8 பைக், 17 செல்போன்கள், கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரிக்கின்றனர்….

The post போலீசாரை தாக்கிய வழக்கில் சென்னை வாலிபர் உள்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Walibur ,Madurandagam ,Chengalbatu District Mathurandagam Police Police Police ,Madurandakam ,Pudur ,Valibur ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...