×

ஆவடி மாநகராட்சியில் நிலைக்குழு தலைவர்கள் உறுப்பினர்கள் தேர்வு

ஆவடி: ஆவடி மாநகராட்சி, திருநின்றவூர் நகராட்சியில் நிலைக்குழு தலைவர்கள், உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது. ஆவடி மாநகராட்சியில் நிலைக்குழு தலைவர்கள், நியமனக்குழு உறுப்பினர் தேர்வு நேற்று  நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் எஸ்.சரஸ்வதி தேர்தலை நடத்தினார். இதில், கணக்கு குழுத்தலைவருக்கு வீரபாண்டியன், பொது சுகாதார குழுத்தலைவருக்கு டாக்டர் ராஜேஷ்குமார், கல்வி குழுத்தலைவருக்கு கீதா யுவராஜ், வரி விதிப்பு மற்றும் நிதி குழுத்தலைவருக்கு சுந்தரி சிங்காரம், நகரமைப்பு குழுத்தலைவருக்கு மாலா பிரகாஷ், பணிகள் குழுத்தலைவருக்கு ஆசிம்ராஜா மற்றும் நியமனக்குழு உறுப்பினருக்கு சுமதி சோழாகண்ணன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனையடுத்து மேற்கண்ட 7 பேரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிலைக்குழு தலைவர்கள், நியமன குழு உறுப்பினர் ஆகியோர் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். திருநின்றவூர் நகராட்சியில் நியமனக் குழு, ஒப்பந்த குழு, வரி விதிப்பு மேல் முறையீட்டுக் குழு உறுப்பினர்கள் தேர்வு நேற்று காலை நடைபெற்றது. நகராட்சி ஆணையர் எஸ்.கணேஷ் தலைமை தாங்கி தேர்தலை நடத்தினார். இதில், நியமன குழு உறுப்பினருக்கு எஸ்.கமலக்கண்ணன், ஒப்பந்த குழு உறுப்பினருக்கு தேவி யோகா, வரி மேல் முறையீட்டுக்குழு உறுப்பினர்களுக்கு ஜெ.விஸ்வநாதன், ஜெ.அன்பழகன், சி.தங்கராஜ், எஸ்.கோமதி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனை அடுத்து மேற்கண்ட 6 பேரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் பிறகு, 6 உறுப்பினர்களும் பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், நகராட்சி தலைவர் உஷாராணிரவி, துணைத்தலைவர் சரளா நாகராஜ், நகராட்சி ஆணையர் எஸ்.கணேஷ், திமுக நகர செயலாளர் தி.வை.ரவி ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர். …

The post ஆவடி மாநகராட்சியில் நிலைக்குழு தலைவர்கள் உறுப்பினர்கள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Awadi ,Standing Leaders ,Municipal Corporation ,Awadi Municipality ,Thirunanavur Municipality ,Dinakaran ,
× RELATED சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க...