சென்னை: தமிழகத்தில் வெயில் தாக்கம் இன்றும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், நேற்று 6 இடங்களில் 100 டிகிரியை தாண்டியது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. இருந்த போதும் ஒரு சில இடங்களில் அவ்வப்போது கோடை மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், மன்னார் வளைகுடா உள் தமிழக பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை வரும் 4ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மட்டுமே பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், தினமும் சில இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நேற்றும் 6 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. இன்றும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. …
The post 6 இடங்களில் 100 டிகிரியை தாண்டியது வெயில் தாக்கம் இன்று அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.