×

இன்ஸ்டாகிராமில் பழக்கம்; கள்ளக்காதலனை தேடி 2 குழந்தைகளுடன் புனேவுக்கு சென்ற பெண் மீட்பு

வேடசந்தூர்: இன்ஸ்டாகிராமில் பழகிய கள்ளக்காதலனை தேடி, 2 குழந்தைகளுடன் புனேவுக்கு சென்ற பெண்ணை வேடசந்தூர் போலீசார் மீட்டு வந்தனர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்த திருமணமான 30 வயது இளம்பெண்ணுக்கு 6 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர். இவர், இன்ஸ்டாகிராமில் மகாராஷ்டிரா மாநிலம், புனேவை சேர்ந்த வாலிபருடன் பழகியுள்ளார். பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அந்த வாலிபர் தனது ஊருக்கு வருமாறு இளம்பெண்ணை அழைத்துள்ளார். இதையடுத்து 2 குழந்தைகளுடன் இளம்பெண், கடந்த 2 மாதத்திற்கு முன் புனே சென்றுள்ளார். அங்கு கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்தி உள்ளார். இதற்கிடையில் குழந்தைகளுடன் மாயமான மனைவியை அவரது கணவர் பல இடங்களில் தேடியும் காணவில்லை. இந்நிலையில், புனே வாலிபர் இளம்பெண்ணின் குழந்தைகளை கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார். இதையடுத்து, குழந்தைகள் மற்றொரு நபரிடம் செல்போனை வாங்கி தங்களது தந்தையை தொடர்பு கொண்டு அழுதுள்ளனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசில், இளம்பெண்ணின் கணவர் புகார் அளித்தார். இதையடுத்து புனே சென்ற வேடசந்தூர் போலீசார், அந்த ஊர் போலீசார் உதவியுடன் இளம்பெண், குழந்தைகள் இருக்கும் இடத்தை அறிந்து, அங்கு சென்றனர்.போலீசாரை பார்த்ததும் வாலிபர் தப்பியோடிவிட்டார். அப்போது இளம்பெண், ‘குழந்தைகளை வேண்டுமானால் அழைத்து செல்லுங்கள். நான் ஊருக்கு வரமாட்டேன்’ என தெரிவித்துள்ளார். போலீசார் அறிவுரை கூறி இளம்பெண்ணையும் குழந்தைகளையும் வேடசந்தூர் அழைத்து வந்தனர். விசாரணையில், இன்ஸ்டாகிராமில் பழகிய நபர் ஹபிபுல்லா (28) என தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்….

The post இன்ஸ்டாகிராமில் பழக்கம்; கள்ளக்காதலனை தேடி 2 குழந்தைகளுடன் புனேவுக்கு சென்ற பெண் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Puney ,Vedasanthur ,Vedasantur police ,Pune ,Thindukal ,
× RELATED குடும்பம் நடத்த பாட்டில் பொறுக்கும் சினிமா நடிகர்