×

திராவகம் வீசப்பட்ட பெண்ணுக்கு ஜிஹெச்சில் தீவிர சிகிச்சை: கள்ளக்காதலனுக்கு வலை

நெல்லை: திருமணத்திற்கு வலியுறு த்திய கள்ளக்காதலி மீது ஆசிட் வீசிய கள்ளகாதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துராமலட்சுமி (35). இவர் ஊர், ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தேனி மாவட்டத்தில் முத்துராமலட்சுமி ஜவுளி வியாபாரம் செய்தபோது, மற்றொரு ஜவுளி வியாபாரியான செல்வம் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. செல்வத்திற்கு திருமணமாகவில்லை. இருவரும் ஜோடியாக சேர்ந்து பல்வேறு ஊர்களுக்கு சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர். அப்ேபாது இருவரிடையே ஏற்பட்ட தொடர்பு, கள்ளக்காதலாக மாறியது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் 2 பேரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் முத்துராமலட்சுமி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு செல்வத்திடம் அடிக்கடி வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று செல்வத்திடம், முத்துராமலட்சுமி மீண்டும் திருமணம் செய்ய வலியுறுத்தவே, ஆத்திரமடைந்த செல்வம் தான் மறைத்து வைத்திருந்த திராவகத்தை முத்துராமலட்சுமி மீது வீசினார். இதில் படுகாயமடைந்த அவர், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெல்லை போலீசார், சிவகங்கை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிவகங்கை போலீசார் நெல்லைக்கு வந்து ராமலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். தப்பியோடிய கள்ளக்காதலன் செல்வத்தை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவரை தேனி, சிவகங்கை மாவட்டங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்….

The post திராவகம் வீசப்பட்ட பெண்ணுக்கு ஜிஹெச்சில் தீவிர சிகிச்சை: கள்ளக்காதலனுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Nellai ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...