×

அதி நவீன சிசிடிவி கேமராக்களுடன் புறக்காவல் நிலையம் திறப்பு: கலெக்டர் திறந்து வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகரின் மைய பகுதியில் பேரறிஞர் அண்ணா பஸ் நிலையம் அமைந்துள்ளது. அங்கிருந்து ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி உள்பட பல்வேறு  மாநிலங்களுக்கும், பல்வேறு மாவட்டங்களுக்கும் செல்ல தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் இப்பகுதியில் தொடர் நகை பறிப்பு, கஞ்சா கடத்தல் உள்பட பல்வேறு குற்றசெயல்கள் நடந்தன. இதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், மாவட்ட நிர்வாகம், எஸ்பி அலுவலகத்தில் தொடர்ந்து புகார் அளித்தனர்.இதையடுத்து, கலெக்டர் ஆர்த்தி ஆலோசனை நடத்தினார். பின்னர், சிவ காஞ்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பஸ் நிலையத்தில் புதிதாக புறக்காவல் நிலையம் கட்ட எஸ்பி சுதாகர் உத்தரவிட்டார். அதன்படி, புறக்காவல் நிலையம் கட்டப்பட்டு, அங்கு ₹10 லட்சத்தில் 31 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்நிலையில், புதியதாக கட்டப்பட்ட புறக்காவல் நிலையத்தை எஸ்பி சுதாகர் முன்னிலையில் கலெக்டர் ஆர்த்தி நேற்று திறந்து வைத்து, குத்துவிளக்கினை ஏற்றி 31 அதிநவீன சிசிடிவி கேமராக்களை துவக்கி வைத்தார். புதிய புறக்காவல் நிலையத்தில் ஒரு எஸ்எஸ்ஐ, 2 காவலர்களுடன் 3 ஷிப்டுகள் என சுழற்சி  முறையில் 24 மணிநேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என கூறப்பட்டது. நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்பி ஐமன் ஜமால், மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் வினோத் சாந்தாராம், டிஎஸ்பி ஜூலியர் சீசர், சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் விநாயகம், எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்….

The post அதி நவீன சிசிடிவி கேமராக்களுடன் புறக்காவல் நிலையம் திறப்பு: கலெக்டர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : outpost ,Kanchipuram ,Perarinagar Anna ,Bus ,Stand ,Andhra ,Karnataka ,Telangana ,Puducherry ,
× RELATED கொள்ளிடம் அருகே மாதானம் புறக்காவல்...