- திருவள்ளூர்
- திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
- பமக்
- காடம்பத்தூர் யூனியன் வெங்கத்தூர் முதன்மை ஊராட்சி
- தின மலர்
திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சியில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு பராமரிப்பு பணி உள்பட எவ்வித அடிப்படை பணிகள் செய்ய போதிய நிதி ஒதுக்காததை கண்டித்தும், ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு உரிய நிதியை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் வ.பாலா (எ) பாலயோகி தலைமை வகித்தார். மாநில துணை அமைப்பு செயலாளர் நா.வெங்கடேசன், மாவட்ட செயலாளர்கள் இ.தினேஷ்குமார், ஆலப்பாக்கம் சேகர், ரமேஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் செ.பூபதி, மாவட்டத் தலைவர் ரமேஷ், கணேசன்ஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் ஒன்றிய, நகர செயலாளர்கள் விஜயராகவன், சுரேஷ், கேசவன், பக்தன், கிருஷ்ணமூர்த்தி, பக்தவச்சலம், வினோத், தேவராஜ்உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்….
The post பாமக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.