×

ஊட்டி படகு இல்லத்தில் படகுகள் வர்ணம் பூசும் பணிகள் துவக்கம்

ஊட்டி :  கோடை சீசன் நெருங்கிய நிலையில், ஊட்டி படகு இல்லத்தில் படகுகள் சீரமைப்பு மற்றும் வர்ணம் பூசம் பணிகள் நடந்து வருகின்றன. நீலகிரியில் ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசன் அனுசரிக்கப்படுகிறது. இச்சமயங்களில், சுற்றுலா பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய படகு இல்லத்தில் 200 படகுகள் மட்டுமின்றி கூடுதலாக படகுகள் இயக்க வேண்டி உள்ளது.கோடை சீசன் நெருங்கிய நிலையில், படகு இல்லத்தில் இருந்த அனைத்து பழைய படகுகளும் சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. தற்போது, சீரமைக்கப்பட்ட பழைய படகுகள் மட்டுமின்றி, அனைத்து படகுகளும் சீரமைப்பு பணிகள் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் இப்பணிகள் முடியும். அடுத்த மாதம் முதல் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவைக்கேற்ப படகுகள் வழங்கப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர். …

The post ஊட்டி படகு இல்லத்தில் படகுகள் வர்ணம் பூசும் பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Ooty Boat House ,Ooty ,Ooty Boathouse ,Dinakaran ,
× RELATED ஊட்டி நகர் பகுதியில்...