×

கோடை சீசன் நெருங்குவதால் புதுப்பொலிவு பெறும் ஊட்டி படகு இல்லம்

ஊட்டி: கோடை சீசன் நெருங்குவதால் ஊட்டி படகு இல்லத்தில் சீரமைப்பு மற்றும் படகுகளில் வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகின்றன. நீலகிரியில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இச்சமயங்களில், சுற்றுலா பயணிகளின் தேவைகளை பூர்த்திசெய்ய படகு இல்லத்தில் 200 படகுகள் மட்டுமின்றி கூடுதலாக படகுகள் இயக்க வேண்டி உள்ளது.கோடை சீசன் நெருங்கிய நிலையில், படகு இல்லத்தில் இருந்த அனைத்து பழைய படகுகளும் சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. தற்போது, சீரமைக்கப்பட்ட பழைய படகுகள் மட்டுமின்றி, அனைத்து படகுகளும் சீரமைப்பு பணிகள் மற்றும் வர்ணம்பூசும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் இப்பணிகள் முடியும். அடுத்த மாதம் முதல் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவைக்கேற்ப படகுகள் வழங்கப்படும் என படகு இல்ல அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post கோடை சீசன் நெருங்குவதால் புதுப்பொலிவு பெறும் ஊட்டி படகு இல்லம் appeared first on Dinakaran.

Tags : Ooty Boathouse ,Ooty ,Ooty Boathouse.… ,
× RELATED ஊட்டி நகர் பகுதியில்...