சென்னை: இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் மற்றும் ஆப்பிரிக்க-ஆசிய கிராமப்புற மேம்பாட்டு நிறுவனத்துடன் (AARDO) இணைந்து, ‘ஆரம்ப சுகாதாரத்தில் புதுமையான கண்டுபிடிப்புகளின் பங்கு’ என்ற தலைப்பில் சர்வதேச ஆன்லைன் பயிற்சி திட்டத்தை தொடங்கியுள்ளது.நாளை வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 18 ஆசிய மற்றும் ஆப்பிரிக்க உறுப்பு நாடுகள் பங்கேற்கின்றன. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,பொது சுகாதாரத்தில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்பதை இன்றைய தொற்றுநோய் காலம் தமிழக அரசுக்கு கற்றுக் கொடுத்துள்ளது’ என்றார்….
The post சென்னை ஐஐடியில் சர்வதேச ஆன்லைன் பயிற்சி திட்டம் தொடக்கம் appeared first on Dinakaran.