×

கஞ்சா விற்ற வாலிபர் கைது

பூந்தமல்லி: மதுரவாயல் பகுதி, தனலட்சுமி நகர், 8வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுரவாயல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்ஐ சுதாகர் தலைமையில் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, ஜெய்தீப் (35), என்பவரது வீட்டில் சிலர் வந்து பொருட்கள் வாங்கி செல்வது தெரிந்தது. உடனே போலீசார், அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு இருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், ஜெய்தீப்பை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், கடந்த சில நாட்களுக்கு முன் ஜெய்தீப், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வைத்து, வீட்டில் சிறிய பொட்டலங்களாக பிரித்து பதுக்கி வைத்து விற்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர்….

The post கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Walier ,Poonthamalli ,Maduravayal ,Thalakshmi Nagar, 8th Cross-street ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் மனைவியை தாக்கிய கணவர் கைது