×

வீட்டை உடைத்து 10 சவரன் கொள்ளை

செய்யூர்:  செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் பவுஞ்சூர் அடுத்த நெற்குணப்பட்டு பகுதியை சேர்ந்தவர் நைனார் (40). பல் மருத்துர். நேற்று முன்தினம் நைனார், தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். நேற்று காலை அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் ஒரு பக்க ஜன்னல் கதவு பெயர்த்து எடுக்கபட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியைடந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகைகள், 2 விலை உயர்ந்த எல்சிடி டிவிக்கள், பட்டு புடவைகள் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மருத்துவர் வீட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தால், அப்பகுதி மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்….

The post வீட்டை உடைத்து 10 சவரன் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Seyyur ,Nainar ,Nelgunapattu ,Pounjur ,Seyyur circle ,Chengalpattu district ,Dinakaran ,
× RELATED நாகையில் 110 சவரன் நகைகள் கொள்ளை..!!