
- மார்க் ஆண்டனி
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- விஷால்
- விஷால் திரைப்படம் தொழிற்சாலை
- அன்புசேஷியான்
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
சென்னை: விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் படங்களை தயாரிக்க கடன் வாங்கியுள்ளார். இதன் மூலம் அவர் பெற்ற ரூ.21.29 லட்சம் கோடி கடனை லைகா புரொடக்சன் நிறுவனம் ஏற்று செலுத்தியது. இந்தக் கடனை நடிகர் விஷால் செலுத்தவில்லை என லைகா வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் 2021 ஜனவரி 1 முதல் 2023 செப்டம்பர் வரையிலான நடிகர் விஷாலின் 4 வங்கி கணக்கு விவரங்கள், நடிகர் விஷால் மற்றும் அவரது குடும்பத்தினரின் அசையும், அசையா சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனிடையே கடந்த செப்டம்பர் 8ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் நடித்து செப்டம்பர் 15ம் தேதி ரிலீசாகும் மார்க் ஆண்டனி படத்துக்கு தடை விதிப்பதாகவும், செப்டம்பர் 12ம் தேதி விஷால் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து விஷால் இன்று நேரில் ஆஜரானார். பணத்தை திரும்ப செலுத்த என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?, ஒருவேளை பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் எதிர்காலத்தில் விஷாலின் அனைத்து படங்களுக்கும் தடை விதிக்கலாமா?. தொடர்ந்து படத்தில் நடிப்பீர்கள், அதன்மூலம் சம்பளம் பெறுவீர்கள், ஆனால் கடனை திரும செலுத்த மாட்டீர்களா?. நீங்கள் என்ன படிக்காத நபரா?, ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது படிக்கவில்லையா?,
கையெழுத்திடுமாறு துப்பாக்கி வைத்து யாரேனும் மிரட்டினார்களா?” என நீதிபதி விஷாலிடம் சராமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் வரையிலான வங்கி கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, நடிகர் விஷால் அடுத்தமுறை ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும், மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பில் விஷாலுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்து, படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீதிபதி ஆஷா நிறுத்தி வைத்தார். நீதிமன்றத்தில் கூறியதற்கு முரணாக வங்கி கணக்கில் விவரம் எதுவும் இருந்தால் எதிர்காலத்தில் படம் எதுவும் நடிக்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள் வழக்கு விசாரணை செப்.19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
The post மார்க் ஆண்டனி படத்திற்கான தடை நீக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.