×

சிதம்பரத்தில் பிரசாதம் வாங்கும் போது தீட்சிதர் மீது தாக்குதல் நடத்திய சக தீட்சிதர்: புகாரின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு

சிதம்பரம்: கோவிலில் பிரசாதம் வாங்கும் போது சக தீட்சிதரை தாக்கியதாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் பூஜை செய்து வருபவர் கிருஷ்ணசாமி தீட்சிதர். இவர் நேற்று இரவு பூஜை முடிந்து கோவிலில் பிரசாதம் பெற்றுள்ளார். அப்போது அங்கிருந்த சக தீட்சிதரான ரவி செல்வம் என்பவர் கிருஷ்ணசாமியை தாக்கியதாக கூறப்படுகிறது. கையால் மார்பில் குத்தி காயப்படுத்தி, பூணூலை அறுத்ததாக ரவி செல்வம் மீது கிருஷ்ணசாமி புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கிருஷ்ணசாமி அளித்த புகாரில், தீட்சிதர் ரவி செல்வம் மீது சிதம்பரம் நகர காவல் நிலையம் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில வாரங்களாக நடராஜர் கோவிலையும், தீட்சிதர்களையும் மையமாக வைத்து பல்வேறு பிரச்சனைகள் எழுவதும், அது தொடர்பான போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது தீட்சிதர் ஒருவரை சக தீட்சிதர்களே தாக்கிய சம்பவம் பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.            …

The post சிதம்பரத்தில் பிரசாதம் வாங்கும் போது தீட்சிதர் மீது தாக்குதல் நடத்திய சக தீட்சிதர்: புகாரின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Dikshitar ,Dikshithar ,Chidambaram ,Chidambaram Nataraja ,Temple ,Saka Dikshitar ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு;...