×

சென்னை அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமனம்..! முடிவுக்கு வந்தது ‘தல சகாப்தம்’ ; வீரராக தோனி விளையாடுவர் என அறிவிப்பு

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திரசிங் தோனி விளக்கியுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தோனி வீரராக களமிறங்க உள்ளார். தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். 2022 மெகா ஏலத்திற்கு முன் அணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. அதில் முதல் வீரராக ஜடேஜாவை தக்கவைத்தது. இதனால் டோனி கேப்டன் பதவியில் நீடிப்பது குறித்து விவாதம் எழுந்தது. அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டோனி கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவித்தது. நாளைமறுதினம் ஐ.பி.எல். 2022 சீசன் தொடங்குகிறது. இந்த நிலையில், இன்று டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார். கேப்டன் பதவியில் இருந்த விலகினாலும் வீரராக அணியில் இடம் பிடித்து விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post சென்னை அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமனம்..! முடிவுக்கு வந்தது ‘தல சகாப்தம்’ ; வீரராக தோனி விளையாடுவர் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Jadeja ,Chennai ,Dony ,Mahendrasingh Thoni ,Chennai Super Kings ,IPL ,Chennai Team ,Dala Era ,Doni ,Dinakaran ,
× RELATED 28 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பை...