×

பழனி அருகே 4 மாத கைக்குழந்தை ஆற்றில் வீசி கொலை: கெட்ட நேரத்தில் பிறந்ததாகக் கூறி தாயே செய்த கொடூரம்

திண்டுக்கல்: பழனி அருகே கெட்ட நேரத்தில் பிறந்ததாக கூறி 4 மாத கைக்குழந்தையை பெட்ரா தாயே ஆற்றில் வீசி கொலை செய்துள்ளார். குழந்தையை கொலை செய்த தாய் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பழனியை அடுத்த ராசாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரன்-லதா தம்பதியினரின் 4 மாத கைக்குழந்தை கோகுல் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராசாபுரம் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார். குழந்தையை ஆற்றில் வீசி கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குழந்தையை தாய் லதாவே ஆற்றில் வீசி கொலை செய்தது தெரியவந்தது. பிறந்தது முதலே குழந்தைக்கு சுவாச பிரச்சனை இருந்ததாகவும், கெட்ட நேரத்தில் பிறந்ததாகவும் கூறி கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே 4 மாத கைக்குழந்தையை ஆற்றில் வீசி லதா கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட லதாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தாயே தனது குழந்தையை ஆற்றில் வீசி கொலை செய்த சம்பவம் ராசாபுரம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.      …

The post பழனி அருகே 4 மாத கைக்குழந்தை ஆற்றில் வீசி கொலை: கெட்ட நேரத்தில் பிறந்ததாகக் கூறி தாயே செய்த கொடூரம் appeared first on Dinakaran.

Tags : Palani ,Petra Taye ,
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை