×

திருத்தணி அருகே அதிகாலையில் ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவன் தற்கொலை? காதல் விவகாரமா என போலீஸ் விசாரணை

சென்னை: திருத்தணி அடுத்த அலமேலு மங்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கராஜபுரம் காலனியை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவரின் மகன் தோனி (எ) தோனீஸ்வரன் (20). இவர், திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் சுகாதார ஆய்வாளர் பட்டப்படிப்பு முதல் வருடம் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணி அளவில், பொன்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தலை, கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஜீவானந்தம் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்த தோனீஸ்வரனின் பெற்றோர், உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சடலத்தை பார்த்து கதறி அழுதனர். அப்போது மாணவனின் உறவினர்கள், ‘வேறு மதத்தை சேர்ந்த இளம்பெண்ணை தோனீஸ்வரன் காதலித்துள்ளார். இதனால், பெண்ணின் உறவினர்கள்தான் கொடூரமாக கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் வீசி இருக்க வேண்டும். எனவே, கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தினர். புகாரின்படி, திருத்தணி போலீசார்  வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே அதிகாலை 3 மணி அளவில், சென்னையில் இருந்து ரேணிகுண்டா சென்ற விரைவு ரயில் ஓட்டுனர், ரயில் முன் வாலிபர் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக புகார் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். இதனால் தோனீஸ்வரன், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் பெண்ணின் உறவினர்கள் கொலை செய்து ரயில் செல்லும்போது தண்டவாளத்தில் வீசினார்களா என சந்தேகம் எழுந்துள்ளது. இளம்பெண்ணின் சித்தப்பா காதர்பாஷா, அவரது சகோதரர் கரிமுல்லா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post திருத்தணி அருகே அதிகாலையில் ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவன் தற்கொலை? காதல் விவகாரமா என போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,CHENNAI ,Jeevanandham ,Singarajapuram ,Alamelu Mangapuram panchayat ,Dhoni (A ,
× RELATED திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள்...