×

செல்போன் பறித்தவர்களை விரட்டி பிடித்த வாலிபர்

பெரம்பூர்: வியாசர்பாடி பெரியார் நகரை சேர்ந்த காளிஷா (29). நேற்று வேலைக்காக பெரம்பூர் ஏ.ஏ.சாலையில் உள்ள வங்கிக்கு சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்து வெளியே வந்தபோது, அங்கிருந்த 2 மர்ம நபர்கள் காளிஷாவை தாக்கி, அவரது செல்போனை பறித்துள்ளனர். சுதாரித்துக்கொண்ட அவர், உடனே அவர்களை தள்ளி விட்டு வங்கிக்குள் சென்று விட்டார். இதனால், அந்த 2 பேரும் கணேசபுரம் நோக்கி பைக்கில் புறப்பட்டனர். அவர்களை பின்தொடர்ந்து பைக்கில் சென்ற காளிஷா, கணேசபுரம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வியாசர்பாடி உதவி ஆய்வாளர் பாக்கியராஜ், தலைமை காவலர் ரகுவிடம் இதுபற்றி கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார், அந்த 2 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்த கார்த்திக் (22), சீனிவாசலு (19) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் 2020ம் ஆண்டு வியாசர்பாடியில் மூதாட்டி ஒருவரை கொலை செய்து விட்டு அவரது நகைகளை திருடி சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post செல்போன் பறித்தவர்களை விரட்டி பிடித்த வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Perampur ,Kalisha ,Vyasarbadi Periyar ,A.A. ,PA ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு