×

மதுபோதைக்கு அடிமையான வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

ஆவடி: திருநின்றவூர், பள்ளத்தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன்(28). குடிப்பழக்கம் உடையவர். வேலைக்கு செல்லாமல் நண்பருடன் சேர்ந்து மது அருந்தி வந்துள்ளார். பெற்றோர் அவரை 2 முறை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து மதுபழக்கத்தில இருந்து மீட்டனர். ஆனாலும் ஜெகதீசன், தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஜெகதீசன், அதிக குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அவரை பெற்றோர் கண்டித்ததால் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். …

The post மதுபோதைக்கு அடிமையான வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Awadi ,Thirunandavur ,Jegadeesan ,
× RELATED சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞர்