×

நாட்றம்பள்ளி அருகே வீட்டில் புகுந்த 4 அடி நீள நாகப்பாம்பு-தீயணைப்பு துறையினர் மீட்டனர்

நாட்றம்பள்ளி : நாட்றம்பள்ளி அடுத்த சோமநாயக்கன்பட்டி பகுதியில் வீட்டுக்குள் புகுந்த பாம்பை  தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.நாட்றம்பள்ளி அடுத்த சோமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்.  இவரது வீட்டில் நேற்று மதியம் பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதை பார்த்த அவர் உடனடியாக இதுகுறித்து நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.தகவல் அறிந்து அலுவலர் கலைமணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று வீட்டில் பதுங்கி இருந்த 4 அடி நீளமுள்ள நாக பாம்பை உயிருடன் பிடித்து திருப்பத்தூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்….

The post நாட்றம்பள்ளி அருகே வீட்டில் புகுந்த 4 அடி நீள நாகப்பாம்பு-தீயணைப்பு துறையினர் மீட்டனர் appeared first on Dinakaran.

Tags : fire department ,Nadrampalli ,fire ,Somanayakanpatti ,
× RELATED ராசிபுரம் அருகே தீயணைப்பு துறை...