×

உயர்மின் கோபுரங்களில் ஏறி விவசாயிகள் போராட்டம் : திருவண்ணாமலை அருகே பரபரப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே விளை நிலங்களில் அமைக்கப்படும் உயர்மின் கோபுரங்களுக்கு நியாயமான இழப்பீடு தொகை வழங்காததை கண்டித்து, மின்கோபுரங்கள் மீது ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தை கொண்டுசெல்வதற்காக, புதிய மின்வழித்தடம் அமைக்கும் பணி கடந்த 3ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த பணியில், ஒன்றிய அரசின் மின் துறையின் கீழ் செயல்படும் பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. இத்திட்டத்துக்காக திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 14 மாவட்டங்களின் வழியாக புதிய மின்வழித்தடம் அமைக்கும் பணி அசுர வேகத்தில் நடந்து வருகிறது. அதற்காக, ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய விளை நிலங்களில் ராட்சத உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், விவசாய நிலங்கள் தரிசாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் தொடர்ந்து போராடியும் பயனில்லை. இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் ஒன்றிய அரசு உறுதியாக உள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும், 143 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் மின் ேகாபுரங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனாலும், விளைநிலத்துக்கான நியாயமான இழப்பீடும் வழங்குவதில்லை என விவசாயிகள் கொதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், விளை நிலங்களில் அமைக்கப்படும் உயர்மின் கோபுரங்களுக்கு, இழப்பீடு வழங்குவதில் பவர்கிரிட் நிறுவனம் பாரபட்சம் காட்டப்படுவதை கண்டித்து, திருவண்ணாமலை அடுத்த நூக்காம்பாடி கிராமத்தில் கடந்த 3 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். ஆனாலும் பேச்சுவார்த்தைக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் முன்வரவில்லை.இதனால், விரக்தியடைந்த விவசாயிகள் நேற்று திடீரென அந்த பகுதியில் உள்ள உயர்மின் கோபுரங்கள் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையறிந்த மங்கலம் போலீசார் மற்றும் திருவண்ணாமலை ஆர்டிஓ வெற்றிவேல் ஆகியோர் சம்பவ இடம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசப்படுத்தினர். பவர்கிரிட் நிறுவன உயர் அதிகாரிகளை அழைத்து பேசுவதாக உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து, உயர்மின் கோபுரத்தில் இருந்து விவசாயிகள் கீழே இறங்கினர். பின்னர், மங்கலம் கிராமத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து இன்று பேச்சுவார்த்தை நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நேற்று முன்தினம் வந்தவாசி அருகே உரிய இழப்பீடு கேட்டு விவசாயிகள் உயர்மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது….

The post உயர்மின் கோபுரங்களில் ஏறி விவசாயிகள் போராட்டம் : திருவண்ணாமலை அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvandamalai ,Tiruvannamalai ,Thiruvannamalai ,Towers ,
× RELATED ‘என் கல்லூரி கனவு’ உயர்கல்விக்கான...