×

வங்கியில் ரூ.18 லட்சத்துக்கு அடகு 1850 நெல் மூட்டைகள் கொள்ளை: தாராபுரத்தில் விவசாயி உட்பட 3 பேர் கைது

தாராபுரம்: தாராபுரம் வங்கியில் ரூ.18 லட்சத்திற்கு அடகு வைத்த 1850 நெல் மூட்டைகளை கொள்ளையடித்து விற்ற விவசாயி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். விவசாயி. இவர், கடந்தாண்டு தாராபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் 1850 நெல் மூட்டைகளை அடமானம் வைத்து ரூ.18 லட்சத்தை  பொருள் ஈடு கடனாக பெற்றார்.  இவற்றை பாதுகாக்கும் பொறுப்பை ஈரோடு பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்.சி.எம்.எல். நிறுவனத்திடம் வங்கி நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர். அந்நிறுவனம், தனியாருக்கு சொந்தமான கிடங்கை வாடகைக்கு எடுத்து அங்கு 1850 நெல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தது.இந்த குடோனைஎஸ்.சுரேஷ்குமார், எம்.சுரேஷ் குமார் ஆகிய இருவர் கண்காணித்தனர். இந்நிலையில், குடோனிலிருந்த 1850 நெல் மூட்டைகளைவிவசாயி ராஜ்குமார் மற்றும் குடோன் கண்காணிப்பாளர்கள் எஸ்.சுரேஷ்குமார், எம்.சுரேஷ் குமார் ஆகிய மூவரும் கொள்ளை அடித்து சென்று விற்றனர். ஆனால், நெல் மூட்டைகள் குடோனில் இருப்பதாக கண்காணிப்பு நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதற்காக, வங்கி நிர்வாகத்தினர் மாதந்தோறும் இருவருக்கும் சம்பளம் வழங்கி வந்தனர். இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் நெல் குடோனை ஆய்வு செய்ய வந்த வங்கி ஊழியர்கள் நெல் மூட்டைகள் இல்லாததால் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வங்கி நிர்வாகம் என்.சி.எம்.எல். மேலாளர் தேவராஜிடம் புகார் செய்தது. இதையடுத்து விவசாயி உட்பட 3 பேர் மீதும் தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி நெல் மூட்டைகளை கொள்ளை அடித்த குடோன் கண்காணிப்பாளர்கள் மற்றும் விவசாயி  ஆகிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க தாராபுரம் போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்படி, தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் விவசாயி ராஜ்குமார், எஸ்.சுரேஷ்குமார், எம்.சுரேஷ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்….

The post வங்கியில் ரூ.18 லட்சத்துக்கு அடகு 1850 நெல் மூட்டைகள் கொள்ளை: தாராபுரத்தில் விவசாயி உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tarapuram ,Tarapuram Bank ,
× RELATED காதலனுடன் தங்கையை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய அண்ணன்