×

மகன்களுடன் மனைவி கிணற்றில் குதித்து சாவு தற்கொலைக்கு தூண்டியதாக கணவர், கள்ளக்காதலி கைது

காடையாம்பட்டி : மகன்களுடன், மனைவி கிணற்றில் குதித்து உயிரிழந்த சம்பவத்தில், தற்கொலைக்கு தூண்டியதாக கணவர், கள்ளக்காதலி கைது செய்யப்பட்டனர்.  சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கணவாய்புதூர் கே.மோரூர் லேண்ட் காலனி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (32). இவரது மனைவி மரகதம். இந்த தம்பதிக்கு செல்வகணபதி, கோகுலகண்ணன் என 2 மகன்கள் இருந்தனர். பிரபாகரனுக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அவர் பழைய பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி அதனை உருக்கி, வெளியூருக்கு பிளாஸ்டிக் பைகள், பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இவருக்கு தனது நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சீதா என்பவருடன், கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மரகதம், பிரபாகரனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பிரபாகரன் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. இதனால் மனமுடைந்த மரகதம், கடந்த பிப்ரவரி மாதம் தனது 2 மகன்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து பிரபாகரன், அவரது கள்ளக்காதலி சீதா ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் இரவு  கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பிரபாகரன் ஆத்தூர் சிறையிலும், சீதா சேலம் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்….

The post மகன்களுடன் மனைவி கிணற்றில் குதித்து சாவு தற்கொலைக்கு தூண்டியதாக கணவர், கள்ளக்காதலி கைது appeared first on Dinakaran.

Tags : Kadaiyampatti ,Kallakathali ,Salem ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...