×

பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் மருத்துவர் சுப்பையாவுக்கு ஜாமீன்.: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் டாக்டர் சுப்பையாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாஜக-வின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. முன்னாள் தலைவரும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் கைது செய்யப்பட்டார். சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மூதாட்டின் வீட்டு வாசலில் அநாகரிமாக நடந்து கொண்டதாகவும், பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் 2 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனையடுத்து, முதலமைச்சர் வீடு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய ஏபிவிபி அமைப்பினரை சிறையில் சந்தித்து, அரசு ஊழியர்கள் விதியை மீறி செயல்பட்டதால் அவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை புற்றுநோய்த்துறை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில் சுப்பையா சண்முகம் சில தினங்களுக்கு முன்னதாக கைது செய்யப்பட்டார். இந்தநிலையில், டாக்டர் சுப்பையாவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.    …

The post பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் மருத்துவர் சுப்பையாவுக்கு ஜாமீன்.: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Dr. ,Subbiah ,CHENNAI ,Dinakaran ,
× RELATED மருத்துவர் பத்திரிநாத் இழப்பு...