×

பெட்ரோல் போல் எரியும் கிணறுகள்: மக்கள் பீதி; அதிகாரிகள் ஆய்வு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், பாலக்காடு அருகே திருத்தாலா பகுதியில் உள்ளது கூற்றநாடு கிராமம். இங்குள்ள பெரும்பாலான வீடுகள், கடைகளில் கிணறுகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு சில கிணறுகளில்  உள்ள தண்ணீரில் பெட்ரோல் வாசனை அடித்தது. இதனால், சந்தேகமடைந்த மக்கள், வாளியில் தண்ணீரை பிடித்து தீ வைத்தபோது மளமளவென தீ பிடித்தது. இதேபோல், கிணற்றில் உள்ள தண்ணீரும் தீயை போட்டதும் கொழுந்துவிட்டு எரிகிறது. இது குறித்து சுற்றுச்சூழல் அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தினர். இந்த வீடுகளுக்கு அருகே ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. அங்கிருந்து பெட்ரோலோ, டீசலோ கசிந்து கிணற்றுத் தண்ணீரில் கலந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது. …

The post பெட்ரோல் போல் எரியும் கிணறுகள்: மக்கள் பீதி; அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Koortanadu ,Tiruthala ,Palakkad, Kerala ,
× RELATED கேரளாவில் மனித உடல் உறுப்புகளை கடத்தி...