×

ECR-ல் ஆறு வழிச் சாலை, வானிலையை கணிக்க சூப்பர் கம்ப்யூட்டர், அறிவுசார் நகரம், ஆராய்ச்சி பூங்காக்கள் : பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்புகள்!!

சென்னை: தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் 2வது காகிதம் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்த பின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரை நிகழ்த்தியது பின்வருமாறு… ‘ கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது திமுக அரசு பொறுப்பேற்றது. கொரோனா பரவலை சிறப்பாக கட்டுப்படுத்தியதுடன் தேர்தல் வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றியது.’இக்கட்டான சூழலில் ஆட்சி பொறுப்பேற்றாலும், தொலைநோக்கு திட்டங்களை வகுத்துள்ளோம். கடந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் இடம்பெற்றன.கொரோனா பெருந்தொற்றின் 2வது மற்றும் 3வது அலை மிகச்சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனா காலத்தில் நிதிச்சுமை அதிகமாக இருந்தபோதும் நிதி நிர்வாகத்தால் திறம்பட சமாளித்தோம்.’தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தலாக இருந்த நிலையில், தற்போது அது மாற்றப்பட்டுள்ளது.தீர்க்கமான நடவடிக்கையால் அரசின் வருவாய் பற்றாக்குறை, 4.16%லிருந்து, 3.08%ஆக குறைய உள்ளது. திராவிட இயக்கம் சமூகநீதிக்கான போராட்டத்தில் வெற்றி பெற்றாலும், அது இன்னும் முழுமையாக முடியவில்லை. *நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி முதல்வரின் செயல்பாட்டிற்கான அங்கீகாரம்.முதல்வர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. மாநில அரசின் உரிமைகளுக்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும்.*சமூகத்தின் அனைத்து பிரிவினரின் எதிர்பார்ப்புகளையும்  நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. சமூக நல திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.அனைத்து தளங்களிலும் சமூக நீதியை நிலை நாட்டுவதில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம்.*தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை வரும் ஆண்டில் ரூ.7,000 கோடிக்கும் மேல் குறைகிறது. 2014 முதல் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே வந்தது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக வருவாய் பற்றாக்குறை குறைகிறது. *தாமிரபரணி படுகையில் கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் 3,200 ஆண்டுகள் பழமையானதாகும்.தாமிரபரணி ஆற்றுப் படுகை தொல்பொருட்கள் மூலம், தமிழர் தம் வரலாறு மீண்டும் உறுதியாகியுள்ளது.*உக்ரைன்-ரஷ்யா போரால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியிலும் பாதிப்பு ஏற்படக் கூடும். ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறையின் மூலம் 10.01 லட்சம் மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.*ஜிஎஸ்டி வரி நடைமுறை மூலம், மாநில அரசின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.ஒன்றிய அரசின் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையால் ரூ.20,000 கோடி இழப்பு ஏற்படும். ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறையை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் முதல்வர் கேட்டுள்ளார். *தமிழ் மொழியின் தொன்மையையும், செம்மையையும் போற்றிட, பிற மொழிகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் வேர் சொற்களை முன்னிலைப்படுத்தி, தமிழ் மொழி வளத்தின் புகழ்பரப்ப மொழி வல்லுநர்கள் குழு அமைக்கப்படும்.’அகரமுதலி’ திட்டத்தின் கீழ் தமிழ் மொழியின் வேர்சொற்களை கண்டறியும் ஆய்வு பணி நடைபெறும்.தாய்மொழி கல்வியே சிறந்த கல்விமுறை என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.*அரசின் உதவி பெறாத தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் பாட புத்தகங்கள் வழங்கப்படும்.தனியார் பள்ளிகளில், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு 1 முதல் 10 வகுப்பு வரை இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். விழுப்புரம், இராமநாதபுரம் மாவட்டங்களில் ரூ.10 கோடியில் புதிதாக அருங்காட்சியகம் அமைக்கப்படும்*தமிழ் மற்றும் இந்தோ – ஐரோப்பிய மொழிகள் தொடர்பு குறித்து ஆய்வு செய்யப்படும். தமிழ் மொழி குறித்த ஆய்வுக்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. *தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு, 2 இடங்களில் தல ஆய்வு செய்யப்படும். தொல்லியல் ஆய்வுகளுக்காக ரூ. 7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். *அரசு நிலங்களை பராமரிக்க சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நவீன முறையில் நில அளவை பணிகளை மேற்கொள்ள ரோவர் இயந்திரம் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. *சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுபேரிடர் மேலாண்மைத்துறை ரூ.7,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.*சமூக ஊடகங்களில் குற்றச்செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பரப்புரைகளின் விளைவாக அதிகரிக்கும் குற்றச்செயல்களை தடுத்திட சமூக ஊடக சிறப்பு மையம் காவல்துறையில் அமைக்கப்படும்.*காவல்துறைக்கு ரூ.10,285 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.*வானிலையை நவீன நுட்பத்துடன் துல்லியமாக கணிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு*சுய உதவிக்குழுக்களுக்கும், விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.4130 கோடி ஒதுக்கீடு*நீர்வளங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, ரூ.3,384 கோடி நிதி ஒதுக்கீடு*சென்னை அருகே தாவரவியல் பூங்கா ரூ.300 கோடியில் அமைக்கப்படும்*சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும்*கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.1315 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்*தமிழ்வளர்ச்சி துறைக்கு பட்ஜெட்டில் ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கீடு.*சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்காக ரூ.4,816 கோடி ஒதுக்கீடு.*இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு*முன்மாதிரி பள்ளிகள் தொடங்க ரூ.125 கோடி ஒதுக்கீடு*புதிய நூலகங்கள் அமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு. *இலக்கிய திருவிழாக்கள் நடத்த ரூ.5.6 கோடி ஒதுக்கீடு.*சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்த ரூ.849.20 கோடி நிதி ஒதுக்கீடு.*கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு*டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் மகப்பேறு திட்டத்திற்கு ரூ.817 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.*பெரியாரின் சிந்தனைகள், 21 இந்திய மொழிகளில் புத்தகமாக வெளியிட ரூ.5 கோடி ஒதுக்கீடு*தமிழ்நாடு அரசின் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1949 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்*கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு, *சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு*பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உயர்கல்விக்கு ரூ.320 கோடி ஒதுக்கீடு*தமிழ்நாட்டில், தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்திற்கு ரூ.1906 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்* மானிய விலையில் வீடு கட்டித்தரும் திட்டத்திற்கு ரூ.4848 கோடி நிதி ஒதுக்கீடு*சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டங்களுக்கு ரூ.705 கோடி ஒதுக்கீடு*நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமான அம்ரூத் 2.0 திட்டத்திற்கு ரூ.2030 கோடி நிதி ஒதுக்கீடு*புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 6 மாநகராட்சிகளில் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ.60 கோடி ஒதுக்கீடு*நீலகிரி மாவட்டம் உதகை நகரில் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு*அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2க்கு ரூ.1455 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2, 2657 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும்.*தமிழக பட்ஜெட்டில் உயர்கல்வித்துறைக்கு ரூ. 5,668.89 கோடி ஒதுக்கீடு.*இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.293 கோடி ஒதுக்கீடு*பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி நிதி ஒதுக்கீடு*சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ. 911 கோடிநிதி ஒதுக்கீடு*நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ.18218 கோடி ஒதுக்கீடு*பேருந்துகள் நவீன மயமாக்கல், மின் பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ. 5375  கோடி நிதி ஒதுக்கீடு*தரைப்பாலங்களை உயர்மட்ட மேம்பாலங்களாக மேம்படுத்த ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு*நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 20, 400 கோடி நிதி ஒதுக்கீடு*ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.4281 கோடி நிதி ஒதுக்கீடு*முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,547 கோடி நிதி ஒதுக்கீடு. *பல்லுயிரின பாதுகாப்புக்காக வள்ளலார் பல்லுயிர் காப்பகத்திற்கு ரூ . 20 கோடி நிதி ஒதுக்கீடு*டெல்டா கடைமடை பகுதிகள் வரை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு *காவிரி நீர் வடிநில பகுதிகளை சீரமைக்க ₨3384 கோடி ஒதுக்கீடு*ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மூலம் நிலத்தடி நீரை சேமிக்க ரூ. 2787 கோடி நிதி ஒதுக்கீடு*ஏற்றுமதி நிறுவனக் கட்டமைப்பை உருவாக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு*இந்து சமய அறநிலையத்துறையின் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.340.80 கோடி ஒதுக்கீடு*தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.496 கோடி ஒதுக்கீடு*சமூக பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.4,816 கோடி ஒதுக்கீடு*நீதி நிர்வாகத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.1,461 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது*விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கும் திட்டத்திற்கு ரூ.200கோடி ஒதுக்கீடு*தமிழகத்திலுள்ள 64 அணைகளை புனரமைக்க ரூ.3,384 கோடி ஒதுக்கீடு*வனப்பகுதிகளில் வரையாடுகளை பாதுகாக்கும் சிறப்பு திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.10கோடி ஒதுக்கீடு*பள்ளிக்கல்வித்துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.36,000 கோடி ஒதுக்கீடு*பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவு மானியமாக ரூ.7,500கோடி ஒதுக்கீடு*19 மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகளை தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்த ரூ.1,019 கோடி ஒதுக்கீடு*மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.17,901 கோடி ஒதுக்கீடு*மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்திற்கு ரூ.698 கோடி ஒதுக்கீடு*ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.2,542கோடி ஒதுக்கீடு*பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.162கோடி ஒதுக்கீடு*மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.808கோடி ஒதுக்கீடு*கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு*தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள 149 சமத்துவபுரங்கள் ரூ.190கோடி மதிப்பில் சீரமைக்கப்படும்முதற்கட்டமாக 149 சமத்துவபுரங்கள் ரூ.190கோடி செலவில் சீரமைக்கப்படும்*குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.3,000 கோடி ஒதுக்கீடு*கரூர், கடலூர், சிவகாசி மாநகராட்சிகளின் மேம்பாட்டிற்கு தலா ரூ.10கோடி ஒதுக்கீடு*மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்திற்கு ரூ.1,520கோடி போக்குவரத்துத்துறைக்கு மானியமாக ஒதுக்கீடு*மாணவர்களுக்கான இலவச பஸ்பாஸ் திட்டத்திற்கு மானியமாக ரூ.928கோடி ஒதுக்கிடு*தமிழ்நாடு மின் பகிர்மான கழக இழப்பீடுகளை ஈடு செய்ய ரூ.13,108கோடி ஒதுக்கீடு*நுகர்வோர் மின்கட்டண மானியத்திற்கு ரூ.9,379கோடி ஒதுக்கீடு*தமிழ்நாட்டில் ஐடிஐ, பாலிடெக்னிக் உள்ளிட்ட 761 தொழிற்பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்த ரூ.2877 கோடியில் சிறப்புத் திட்டம்*’நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாணவர்களின் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 5 லட்சம் மாணவர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. *புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து ஊக்குவிக்கப்படும்.புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட மைய நூலகங்கள் அமைக்கப்படும்*தமிழ்நாடு ஒலிம்பிக் பதக்கம் தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.*இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 150 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். *அரசு பள்ளிகளில் 6 – 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ரூ. 1000 வழங்கப்படும்.*ரூ. 5.6 கோடி செலவில் அனைத்து மாவட்டங்களிலும், சென்னையை போல புத்தக கண்காட்சி நடைபெறும். தமிழர்களின் மரபை கொண்டாடக் கூடிய வகையில் 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும். புதிதாக பிரிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ₹36 கோடி மதிப்பீட்டில் மத்திய நூலகங்கள் அமைக்கப்படும்.*வட சென்னையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நவீன விளையாட்டு வளாகம் அமைக்கப்படும். அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாடு திட்டம் உருவாக்கப்படும். *புதிய திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும். பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்புகள், கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.*உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பியுள்ள தமிழக மாணவர்களின் கல்விக்காக அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும்.*காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை 750 படுக்கை வசதிகளுடைய தன்னாட்சி அதிகாரம் பெற்ற உயர் தர மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்; ரூ.100 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்.*ஆய்வுகளின்படி, மன அழுத்தம் மற்றும் மனச்சிதைவு ஆகியவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையை, தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் என்ற உயர் நிலை அமைப்பாக மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. *செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.25 கோடியில் சமூக மேம்பாட்டு மையம் அமைக்கப்படும். விளிம்பு நிலையில் உள்ள பழங்குடியினருக்கு(ST), 1000 புதிய வீடுகள், ரூ.50 கோடியில் கட்டித்தரப்படும். *மாணவர்கள் விடுதிகளை மேம்படுத்த சிறப்பு குழு அமைக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களை மேம்படுத்த உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.நகர்ப்புறப் பகுதிகளைப் பசுமையாக்கும் வகையில் 500 புதிய பூங்காக்கள் உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் 6 புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.*சென்னை துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது.சென்னை துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட சாலை திட்டத்திற்கு ரூ.5770 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. *சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் சந்திப்பில் ரூ.322 கோடி மதிப்பில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.*சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  *கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ. 79 கோடி நிதி உதவி  வழங்கப்பட்டுள்ளது. *பழமையான கோயில்களை போல, தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்க்காக்களை பழுது பார்க்க, புனரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கீடு. சென்னை வெஸ்லி தேவாலயம், நெல்லை கால்டுவெல் தேவாலயம், சென்னை நவாப் வாலாஜா பள்ளிவாசல், ஏர்வாடி மற்றும் நாகூர் தர்கா ஆகியவை புனரமைக்கப்படும்.*1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோவில்களை புனரமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. *தமிழ்நாட்டில், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்குவதற்காக, 500 புதிய மின்சார பேருந்துகள் வாங்கப்படும். 500 மின்சார பேருந்துகள் நீங்கலாக, 2,213 புதிய டீசல் பேருந்துகள் வாங்கப்படும்.*தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு. கோயம்புத்தூர், வேலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.புதிய தொழிற்பூங்காக்கள் மூலம், ரூ.50,000 கோடி அளவிற்கு முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.*மீஞ்சூர் – வண்டலூர் இடையிலான வெளிவட்டச் சாலை டெவலப்மெண்ட் காரிடராக மேம்படுத்தப்படும்*இந்தியாவிலேயே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில், தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.*ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் அரசுப்பள்ளிகள் நவீனப்படுத்தப்படும். அரசுப்பள்ளிகளை நவீனமயமாக்க, பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்*அரசுக் கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.250கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகங்களுடன் ரூ.7ஆயிரம் கோடி செலவில் அரசுப்பள்ளிகள் மேம்படுத்தப்படும்*சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.75கோடி செலவில் மாநில புத்தொழில் மையம் அமைக்கப்படும். கோவையில் கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் அமைக்கப்படும்.*சென்னையில் ரூ.54.61கோடி மதிப்பில் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்.*தமிழகத்தில் சுற்றுலாத்துறை மேம்படுத்த ரூ.246கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு. தஞ்சாவூர், காஞ்சிபுரம், திருச்சி, ராமநாதபுரம் மாவடங்களில் தொகுப்பு சுற்றுலா பயணங்கள் திட்டம் செயல்படுத்தப்படும். தனியார் பங்களிப்புடன் தொகுப்பு சுற்றுலா பயணங்கள் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு*தமிழக வீட்டுவசதித்துறைக்கு ரூ.8,700கோடி ஒதுக்கீடு. அரசு ஊழியர்களுக்கான உயர்த்தப்பட்ட அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியத்திற்காக ரூ.19,000கோடி ஒதுக்கீடு*அரசுத்துறைகளின் அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்களை கண்காணிக்க, சொத்து மேலாண்மை மென்பொருள் உருவாக்கப்படும்.*ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்வதை ஊக்குவிக்கும் விதமாக இளநிலை படிப்புகளுக்காண முழு செலவை அரசே ஏற்கும்.6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் இந்த உதவியை பெறலாம்.  *ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இதுவரை இல்லாத அளவுக்கு மேம்படுத்தப்படும். நேர்மையான ஆட்சி வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை நடைமுறைப்படுத்த மேம்படுத்தப்படும்.  *மாநில நிதிநிலை மேம்படும் போது மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும். பெண்களுக்கு மாதம் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். உரிமைத்தொகை பெற தகுதியுடையவர்கள் யார் யார் என்பதை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. …

The post ECR-ல் ஆறு வழிச் சாலை, வானிலையை கணிக்க சூப்பர் கம்ப்யூட்டர், அறிவுசார் நகரம், ஆராய்ச்சி பூங்காக்கள் : பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்புகள்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Finance Minister ,Palanivel Thiagarajan ,Tamil Nadu government ,Chief Minister ,M.K.Stalin… ,ECR ,
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...